இன்றைய காலத்தில் உணவு பொருட்கள் உற்பத்தி துறை நல்ல லாபம் தரக் கூடிய தொழிலாகும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாக சிப்ஸ் உள்ளது. பல தின்பண்டங்களை மக்கள் தங்களின் வீட்டிலையே செய்து சாப்பிடுகின்றனர். அனால் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்வது சற்று கடினம். எனவே இதனை மக்கள் பெரும்பாலும் கடைகளில் வாங்கிதான் சாப்பிடுகின்றனர். மேலும் இதில் நாம் சில நவீன இயந்திரங்களை பயன்படுத்தி சிப்ஸ் தயாரிப்பதால் நல்ல தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க முடியும்.
சிறப்பம்சங்கள் :-
v இந்த தொழிலுக்கு போட்டிகள் குறைவு.
v இயந்திரங்களை பயன்படுத்தி தயாரிப்பதால் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான சிப்ஸ் தயாரிக்கலாம்.
v எந்தவித நச்சு மற்றும் வேதிப் பொருட்கள் கலப்படம் இல்லை. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாபிடலாம்.
v அதிக உற்பத்தி நைட் ரசன் வாயு உணவு பொலித்தீன் பைகளில் அடைத்து நீண்ட நாட்கள் மொறு மொறு வாக வைத்து விற்பனை செய்யலாம்
v நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
v அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
திட்ட மதிப்பிடு : 35 லட்சம் = 10 லட்சம் நடைமுறை மூலதனம்
அரசு மானியம் : 25% NEEDS Scheme