நகர்புறத்தில் உள்ளவர்கள்தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பை தெரிந்து கொண்டு செயலில் இறங்குகின்றனர். மேலும், இவர்களுக்கு தேவையான 80 சதவீத மூலப்பொருள்கள் கிராமங்களில் இருந்துதான் கிடைக்கிறது.
கிராமங்களில் உள்ள மக்கள் புதிய வாய்ப்பைகளை தெரிந்து, செயலில் இறங்கினால் மிக அதிகமாக வருமானம் பெற முடியும் என்பதற்கு சிறந்த ஓர் எடுத்துகாட்டு, இந்த ஆட்டு சாணம் விற்பன. ஆட்டு சாணத்தில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் காரணமாக இயற்கை விவசாயத்தில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் பாலைவனத்தில் விவசாயம் செய்ய அதிக அளவில் ஆட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்தியாவில் 1 கிலோ ஆட்டு சாணம் அமோசான் மற்றும் பிளிப்கார்ட் – டில் ரூபாய் 200 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆதாரம்
ஆட்டு சாணத்தை விற்பனை செய்ய முடியுமா?
நிச்சயமாக.
விற்பனை என்ன ? நீங்களே ஏற்றுமதியே கூட செய்யலாம்.
ஆட்டு புழுக்கையை சேமித்து அதனை ஆட்டு சாணமாக்கி, உரமாக்கி 5 / 10 / 25 / 50 கிலோ முட்டைகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி சாத்தியம் தான்.