சாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
டீ காபி போன்ற பானங்களை அருந்துவது நமது தமிழ்நாட்டில் மிக அதிகம் டீக்கடைகள் காபி கடைகள் உணவகங்கள் அதிகம் உள்ளது தமிழகத்தில் தான் காலையில் எழுந்தது முதல் மாலை வரை டீக்கடைகளில் அதிகமான பேர் டீ அருந்துவது வழக்கம் நகரங்கள் மற்றும் எல்லா கிராமங்களிலும் டீ கடைகள் உள்ளன முன்பு டீக்கடைகளில் கண்ணாடி டம்ளரில் டீ அளித்து வந்தனர் பிறகு அவை சுத்தமாக கழுவுவது இல்லை எனவே பேப்பர் கப் டீ கப்புகள் வழக்கத்திற்கு வந்தன இவை சுத்தமாக இருந்தாலும் மெல்லிய பிளாஸ்டிக் சீட் இருப்பதால் இதை மத்திய மாநில அரசுகள் தடை செய்துவிட்டன இப்போது சுத்தமான டம்ளரில் டீ குடிக்க வேண்டும் என்றால் மிக கடினம் எனவேதான் உடனடியாக சாப்பிடும் டீ கப்புகள் இப்போது வழக்கத்திற்கு வந்துள்ளன இவை டீ சாப்பிட்டவுடன் அப்படியே டீ கப்புகள் சாப்பிட்டு விடலாம் இதனால் டீ சாப்பிடுபவர்களுக்கு சுத்தமான டீ கிடைக்கிறது அத்துடன் சாப்பிடும் டீ கப்புகளும் கிடைக்கின்றன இவை சுற்றுப்புறச் சூழ்நிலையை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றது
சிறப்பம்சங்கள் :-
Ø குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உகந்த உடனடியாக சாப்பிடும் டீ கப்புகள் .
Ø இவை சுற்றுப்புறச் சூழ்நிலையை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றது
.Ø இது உடலுக்கு மிக சிறந்த பலனை கொடுக்கும்.
Ø நல்ல லாபகரமான தொழில்.
Ø இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
திட்ட மதிப்பிடு : 4.20 லட்சம்
அரசு மானியம் : 25-35% PMEGP & 25% UYEGP Scheme